Friday, October 8, 2010

கள்ளி மலர்



கான்க்கிரிட் காட்டு
விலங்குகளின்
வாசம் படாத
காணி நிலத் தாவரம் !

பச்சை தோலுக்கும்
வெள்ளை குருதிக்கும்
பிறந்த குழந்தை !

மங்கையின்
கூந்தல் சேற
மல்லிகையுமல்ல !

சாமிக்கே 
வாசம் கூட்டும்  
சம்மங்கியுமல்ல !

சமையங்களில்
தேனிக்கள் கூட 
தீண்டுவதில்லை !

இது யாரும் 
சூடா மலர்தான் - ஆனால் 
வாட மலர் !  
                       
          - சு. கனகராஜ்

No comments: