Saturday, December 25, 2010

கல்லறை தெய்வங்கள்



இலையுதிர்ந்த கிளைகள்
பச்சையம் வாடிய
கிளைகளின் முலைகள்
எலும்புக் கூடுகளாக
மரங்கள் !


முட்கள் புடைசூழ
வரவேற்கும்
நெருஞ்சி மலர்கள் !


புல் நுனியை
வளைத்து மின்னும்
கடைசி பனித்துளியில்
சூரியனின்
ஒளிச் சிதறல்கள் !


இங்கே
தென்றல் கூட
கசப்பு வாடை
வீசுகிறது !


கடைசிவரை
முகம்பார்க்க வராதவன்
காலடியில் விட்டுச்சென்ற
கண்ணீர் துளிகள்
தாயின் கல்லறையில் !


சு.கனகராஜ்

Wednesday, October 27, 2010

பாண்டியர்

பாண்டியர்

பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்


பாண்டிய நாடு


இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

 
 
பாண்டியரின் தோற்றம்


சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 1000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறியபடி






“ "முன்னீர் விழவின் நெடியோன்


    நன்னீர் மணலினும் பலவே"


அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர் பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது. பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாட்களில் பரத கண்டம் என்று அழைக்கப்பட்டதாலும்,பாண்டியர் கடல் சார்ந்த ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர் எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

 
 
 
பாண்டியரைப் பற்றிய பதிவுகள்
 
மகாபாரதத்தில்


திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.



 அசோகனின் கல்வெட்டுக்களில்

மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய அரசன் அசோகன் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.



பிற நாட்டவர் பதிவுகள்

கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற யவன நாட்டுத் தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




Coin of Augustus found at the Pudukottai hoard, from an ancient Tamil country, Pandyan Kingdom of present day Tamil Nadu in India. British Museum.



The Periplus of the Erythraean Sea (c. 60 - 100 CE) describes the riches of a 'Pandian Kingdom'







...Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea....
 
 









...The kingdom of Panyue is also called Hanyuewang. It is several thousand li to the southeast of Tianzhu (Northern India)...The inhabitants are small; they are the same height as the Chinese.


The Roman emperor Julian received an embassy from a Pandya about 361. A Roman trading centre was located on the Pandyan coast at the mouth of the Vaigai river, southeast of Madurai).






Pandyas also had trade contacts with Ptolemaic Egypt and, through Egypt, with Rome by the first century, and with China by the 3rd century. The 1st century Greek historian Nicolaus of Damascus met, at Damascus, the ambassador sent by a king from Dramira "named Pandyan ",




வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.300 - கி.பி.300) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது


இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. ஒரு புறநானூற்றுப் பாடல் நெடியோன் என்னும் இவ்வரசனைப் பற்றிய பாடலில் இவனை வாழ்த்தும் ஒரு செய்தியில்




“ "முன்னீர் விழவின் நெடியோன்"

"நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"



நெடுஞ்செழியன்


நெடுஞ்செழியன் கி.பி 160 முதல் 200 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்




“ "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்


பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!


பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்


சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்


ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்


முத்தோன்  வருக என்னாது அவருள்


அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்


வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்


கீழ்ப்பால் ஒருவன் கற்பின்


மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"



சிலப்பதிகாரம்


பாண்டிய நாட்டிற்கு சிலம்பு விற்க வந்த கோவலன், தனது மனைவி கண்ணகியை புத்த துறவி கவுந்தியடிகளது பாதுகாப்பில் இருத்தினான். கண்ணகியின் விலைமதிப்பற்ற காற்சிலம்பை அரசனுக்கு விற்க விரும்பி, அவளது ஒரு காற்சிலம்பை மட்டும் எடுத்துக்கொண்டு அரசவைப் பொற்கொல்லனை சந்தித்தான். கண்ணகியின் காற்சிலம்பு அரசியின் சிலம்பை ஒத்திருந்தது. வஞ்சம் மிகுந்த பொற்கொல்லன், காவலர்களை அழைத்து கோவலனே அரசியின் சிலம்பைக் களவுசெய்தவன் என பொய்யுரைத்தான்

வழக்கைத் தீர விசாரிக்காத நெடுஞ்செழியன், "கொண்டக்கள்வனை (கொண்ட+அந்த+கள்வனை) கொணர்க" என்பதற்கு பதில் "கொன்றக்கள்வனை(கொன்று+அந்த+கள்வனை) கொணர்க" என்று கூறி விட்டான். ஆதலால் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கருதி அவன் கொலைக் களத்தில் கொல்லப்பட்டான்.




கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த கண்ணகி, தன்வசமிருந்த மற்றொரு காற்சிலம்புடன் அரசவை விரைந்தாள். அரசனிடம் நீதி கேட்டாள். அரசியின் ஒரு காற்சிலம்பில் இருந்ததோ முத்து மணிகள். கண்ணகியின் காற்சிலம்போ மாணிக்கப் பரல்களைக் கொண்டிருந்தது.



 தான் அறம் வழுவியதை உணர்ந்து மனம் நொந்து "யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Friday, October 8, 2010

கள்ளி மலர்



கான்க்கிரிட் காட்டு
விலங்குகளின்
வாசம் படாத
காணி நிலத் தாவரம் !

பச்சை தோலுக்கும்
வெள்ளை குருதிக்கும்
பிறந்த குழந்தை !

மங்கையின்
கூந்தல் சேற
மல்லிகையுமல்ல !

சாமிக்கே 
வாசம் கூட்டும்  
சம்மங்கியுமல்ல !

சமையங்களில்
தேனிக்கள் கூட 
தீண்டுவதில்லை !

இது யாரும் 
சூடா மலர்தான் - ஆனால் 
வாட மலர் !  
                       
          - சு. கனகராஜ்

Thursday, July 29, 2010

அன்பு

எலும்புக் கம்பிகள்
பூட்டிய இதயத்தில்
ஈரப் புன்னகை !


காலம்

கடலும்
வானும்
சந்திக்கும் புள்ளி !




ஓவியப்பிழை

பார்வை இழந்த
பாவையின்
கண்களில் வழியும்
கண்ணீர் !

Monday, July 19, 2010

சோழர் குலம்





கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.




கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.



கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.



சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.



தலைநகரம் முந்தய சோழாக்கள்: பூம்புகார், உறையூர்,



Medieval Cholas:   பழையாறை, தஞ்சாவூர்


கங்கைகொண்ட சோழபுரம்


கல்லணை


கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.




இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று  நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.



கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.







இராஜராஜ சோழன்    -     அருள் மொழிசோழன்




 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராஜராஜன் மன்னனானான். இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. இவற்றுக்காக இராஜராஜன் நடத்திய போர்கள் பல. பாண்டி நாட்டின் மீதும், சேர நாட்டின் மீதும் போர் தொடுத்து, பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனையும், சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனையும் தோற்கடித்தான். இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத்தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து மைசூரை அண்டிய பகுதிகளைக் கைப்பற்றினான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.



சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராஜராஜன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.



இன்றைய திரிகோணமலையை அடுத்த கல்வெட்டுகளில் இந்த தமிழ்-பௌத்த மரபு பற்றிய வாசகங்கள் காணப்படுகின்றன. இவை இந்துக் கடவுளர்க்குப் பதிலாக, புத்த பகவானைக் கொண்டு துவங்குகின்றன. புத்த பகவானைத் “தேவன்” என்று குறிப்பிடும் வாசகங்களையும் அங்கே காணமுடியும். ஆக, இந்தத் தமிழ்-பௌத்த மரபினர், இந்து அடிப்படைகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் புத்தபகவானை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் ரீதியாக சோழ அரசர்களையே அண்டியிருந்தனர். எடுத்துக்காட்டாக, இவர்களுடைய பௌத்த-விகாரையின் பெயர் ராஜராஜ பெரும்பள்ளி. ராஜராஜசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு விகாரை அக்காலத்தில் இருந்துவந்ததும் குறிப்பிடத்தக்கது.



 இராஜேந்திர சோழன்





ராஜராஜன் மறைவுக்குப்பின், 1012 ஆம் ஆண்டில், அவனது மகனான இராஜேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கெனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராஜேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் சோழநாடு மேலும் விரிவடைந்தது. ஏற்கெனவே பெற்றிருந்த வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும், அவன் போர்களில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாஸ்கர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.



வடக்கு எல்லையிலும், சாளுக்கியர்களை மீண்டும் அடக்கிவைக்கவேண்டி ஏற்பட்டது. அப்பகுதியில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் தோற்கடித்தது சோழர்படை. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராஜேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.



இக்காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது.




சோழரும் சாதியமும்


சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். [4]



பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்

Sunday, March 28, 2010

விழ விழ எழுவோம் ( மே 17 முள்ளிவாய்க்கால்)





இன்று முள்ளிவாய்க்கால் சோக தழும்புகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள். இதே ஆண்டு மே 17 ஆம் தேதி தான் சிங்களம் தான் கோர நாக்குகளால் சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்களை விழுங்கத்தொடங்கிய நாள். ஆம் நான்காம்   ஈழப்போர் தமிழ் மக்களின் வாழ்வில் இடியாய் வந்து இறங்கி இரத்தச்சகதியாய் மொத்தத் தமிழினமும் குத்துயிரும் கொலையுமாய் செத்து மடிய  ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லாமல் அலைகடல் முன்பு அலையலையாய் 
ஓடி குடும்பம் குடும்பமாய் எறிகணைக்கும் , ஷெல் வீச்சுகளுக்கும்  ,  விமானத்தாக்குதலுக்கும் , வெறிகொண்ட சிங்கள போர் வீரர்களுக்கும் ,  சிங்கள கடற்ப்படையின் இடை விடாத ஏவுகணை தாக்குதலுக்கும் மத்தியில் தாய் , தந்தை , மகன் , பிள்ளை  என்ற பேரம் பாராமல் கொத்துக்கொத்தாய் செத்து விழுந்த தினம் . ஒன்றரை ஆண்டுகள் நீடித்த போர் கடைசியில் 2009 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் வாக்குப்பதிவு என்னத்தொடங்கி  காங்கிரஸ் பக்கம் வெற்றி என முடிவுகள் வர தொடங்கியவுடன் சிங்கள ராணுவம் மிக மூர்க்கத்தனமாக தனது இறுதித்தாக்குதலை இந்தியாவின் ஆதரவோடு உலக நாடுகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு , சர்வதேச போர் விதிகளுக்கு முரணாக இரசாயன ஆயுதம் ,கனரக ஆயுதங்களின் உதவியுடாக , சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடக மக்களுக்குசென்ற உணவுப்பொருள்களை 
தடுத்து அவர்களை கஞ்சிக்கு வழியில்லாமல் ஆக்கி ,  தமிழ் மக்கள் சுமார் 50 ஆயிரம் பேர் செறிந்து இருந்த அந்த முள்ளிவாய்க்கால் மீது  மே 17 ஆம் தேதி தொடங்கி  19 ஆம் தேதி வரை இறுதித்தாக்குதலை ஆரம்பித்து கோரத்தாண்டவம் ஆடியது . கடைசி நேரத்தில் மக்களின் உயிர் பலியை சகிக்க முடியாமல் எஞ்சியுள்ள மக்களை காப்பாற்ற காயமடைந்த மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க  புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கசெய்து புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் திரு. நடேசன்  உள்பட  சுமார் 300 பேர் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் திரு. டேவிட் மில்பண்டட், பத்திரிக்கையாளர் திருமதி. கொல்வின் , ஐநாவின் பிரதிநிதி திரு. விஜய் நம்பியார், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் ஊடக கொடுங்கோலன் ராஜபக்ஷேவின் ஒப்புதளைப்பெற்று சரணடைய வந்தவர்களை சர்வதேச போர் விதிகளுக்கு மாறாக மனிதபிமற்ற முறையில் சுட்டுக்கொல்ள்ளப்பட்டனர். அவர்களின் இரத்தம் காய்வதற்குள் மொத்த மக்களையும் கூண்டோடு அழித்து இராசயனக்கலவை ஊற்றி எரித்துவிட்டனர்.
சர்வத்ச பக்கச்சார்பற்ற ஊடகங்களை கடைசிவரை போர் பகுதிகளுக்குள் அனுப்பாமல் சிங்கள அரசு தடுத்தது ஆனால் சிங்கள அரசின் கைகூலிகளான NDTV, CNN ibn, TIMES NOW, HINDU, DINAMALAR ஆகிய ஊடகங்களின் பத்திரிக்கையாளர்களை எதோ சுற்றுலாவுக்கு அழைத்துசெல்வதுபோல் அவர்கள் ஏற்கனவே புலிகளிடமிருந்து
கைப்பற்றிய இடங்களுக்கு கூட்டிச்சென்று போர் நடக்கும் பகுதிபோல பாவ்லா கட்டினார்கள் இங்குள்ள சில ஈர வெங்காயங்களும் அதை அப்படியே நம்பினார்கள் . ஆனால் சர்வதேச ஊடகங்களான BBC, American CNN, THE TIMES (london) , CHENNAL 4 (london), AL JASIRA உள்பட பல ஊடகங்கள் உண்மையை வெட்டவேளிச்சமாக்கின. அதனால் இப்போது சிங்கள அரசின் மீது பல நாடுகள் போர்குற்ற விசாரணைகள் நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றன ஆனால் அதையும் இந்திய உள்பட பலநாடுகளின் உதவியோடு தப்பித்துவருகின்றனர் .
இந்த போரை திருமதி. சோனியாகாந்தி மட்டும் நினைத்திருந்தால் ஒரே நாளில் தடுத்திருக்க முடியும் ஆனால் அதை சொன்னால் சில காங்கிரஸ் நண்பர்களுக்கு கோவம் வருகிறது , என்ன செய்வது உண்மை கசக்கிறது என்பதற்காக அதை சொல்லாமலா இருக்கமுடியும். கலைஞர்    போரை நிறுத்துவதை விட  உலக தமிழர்களின் தலைவனாக பிரபாகரன் ஆகிவிடக்கூடாது என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனால் தான் அவரால் போரை நிறுத்தமுடியும் என தெரிந்திருந்தும் கடைசி வரை ஆதரவை திரும்பப்பேராமல் கடிதம் ,தந்தி , கொரியர் , இஸ்பீடு போஸ்ட் , மனிதச்சங்கிலி , போராட்டம் , மறியல் , பந்த்  கடைசியாக 2 மணிநேர உண்ணாவிரதம் என  மழுப்பிக்கொண்டே இருந்தார்.
இவரால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ தபால் துறைக்கு நல்ல வருவாய் கிடைத்தது . முள்ளிவைக்கால் கோரம் நடந்துகொண்டிருந்தபோது இவர் டெல்லியில் அமர்ந்து பதவி பேரம் நடத்திக்கொண்டிருந்தார். இப்போது உலகத்தமிழ் மாநாடு என்று இழந்த தனது பெயரை மீட்க்கப்பார்கிறார். எத்தனை செய்தாலும் கால கல்வெட்டில் கலைஞரின்  துரோகம் என்றும் மறையாது . நான் பிறந்ததே  தி. மு.க  குடும்பத்தில் என்றைக்கு இவர் ஈழ போரில் துரோகம் செய்தாரோ அன்று இவரின் உண்மையான 
சுயருபத்தை தெரிந்து கொண்டேன். இந்தியா இராணுவ தளவாடங்களையும் ,
விமானங்களையும், குருந்தொலைவு   ஏவுகணைகளையும், போர் வீரர்களையும் போதாக்குறைக்கு 500 கோடிக்குமேல் நம் வரிப்பணத்தை கடனாகவும் அள்ளிக்கொடுத்து அதுமட்டுமல்லாமல் ஐநா சபையில் 
சிங்கள அரசின்மீது போர் குற்ற விசாரணை வரும்போதெல்லாம் அதைத்தான் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து காப்பாற்றி வந்தபோதெல்லாம் கைகட்டி வாய்மூடி 
அமைதியாக இருந்துவிட்டு இப்போது தமிழ்மாநாடு என்று கூப்பாடு போடுகிறார்.
சோனியாகாந்தி குடும்பம் செயததென்னாவோ பழிவாங்கல் தான் ஆனால் கலைஞர் செய்தது பச்சை தமிழினத்துரோகம் தன குடும்பத்துக்காக மத்திய அரசோடு சண்டைபோடும் கலைஞர் தமிழினம் கொத்துக்கொத்தாய் செத்தபோது கோரிக்கையோடு 
நின்றது ஏன். தமிழை வைத்து தன்னையும் தன் கட்சியையும் வளர்த்தார் தமிழ் மக்களின் உயிரை வைத்து தன் குடும்பத்தை வளர்க்கிறார் சினிமாக்காரிகளின் அரைகுறை நடனத்திலும் பாரட்டுமழையிலும்  நனையும் இவருக்கு இன்னும் முள்வேலிக்குள் சுமார் 250000 தமிழ் மக்கள் தங்கள் உயிரையும் பெண்கள் மானத்தையும் தங்கள் கையில் பிடித்துக்கொண்டிருப்பது எங்கே தெரியப்போகிறது.      


             


மண்டியிட்டு வாழ்வதை விட நின்று கொண்டே சாவது மேல் 
என்றான் பாரதிதாசன்    

முள்ளிவாய்க்கால் முடியாது !
தமிழினம் மடியது !
தன்மானம் குறையாது !
சிங்கள சேற்றில் !
தமிழ் மண் விடியாது !


எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக !
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக !
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக !
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன !
எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன !
எங்கள் உதடுகள் அண்டியிள்ளன !
எங்கள் பற்களும் கண்டிப்போயுள்ளன !
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக !
எங்கள் முதுகுதோல் பயிந்து  போகட்டும் !
தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் உயரும் !
கவிழ்ந்த இமைகள் ஒருநாள் உயரும் !
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிக்கும் !
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும் !
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக !
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !

                                 - வைரமுத்து 

             

Wednesday, March 24, 2010

Road side Trees


Vehicles noise
Carbon gas
Non-stopped horns
Sleepless nights
Please,
Let them breath
as we !

Humans who has been
Chopper down
the inherent trees !
They who thought
their final tear !
Nobody can't
live here !
Coming few years !

Please...
Let them live !
Because,
Our lives are
in their leaves !

  • S.Kanagaraj
எப்புடி எங்க இங்கிலிபிஸ்

FIRE AND ICE



Some say the world will end in fire,
Some say in ice.
From what I've tasted of desire
I hold with those who favour fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction ice
Is also great
And would suffice.

  • Robert Frost

Tuesday, March 23, 2010

சங்கதி




இறந்தகாலம்
பேசினேன் - அதில்
நிகழ்காலம்
இறந்தது !
  
  • கனகராஜ்  



வளையல்


தங்கம்  , வெள்ளி
வைரம், பிளாட்டினம்
என பெண்களுக்கு
இடப்படும்
விலையுயர்ந்த கை விளங்கு ! 

  •  கனகராஜ்

Monday, March 22, 2010

சாதியும் சாமியும்



சிதறிக்கிடந்த கண்ணாடி 
வளையல்களில் 
கண்ணிர் துளிகள் 
தாயின் கண்களில் !

காப்பாற்றபட்ட  சாதி
குருதி வாசம்
அரிவாள் நுனியில் 
தந்தையின் கைகளில் !

காயாத காதலன் முத்தம் 
கழுத்தோடு உறைந்த 
இரத்தம் 
கடைசி சுவாசம் 
தாயின் மடியில் !

சுவரில் சாய்ந்த
முருகன் படம்
கையில் வேலோடு
அருகில்
குறப்பெண் வள்ளி ! 

இப்படிக்கு
கனகராஜ்
(கருமூலம் பெ. தி .க  மேடைபேச்சு )

Wednesday, March 17, 2010

துருவப் பறவை

பனிபாலை                               
நீங்கள் பார்க்காத                   
ஆறாம் திணை !                   
                                                    
நீர் கூட                                   
கல்லாகும்                              
உறைபாகை!                          
                                                   
சூரியனும்                             
உறைந்து போகும்                           
நெடும் பனிக்காலம் !   
      
குளிர்கால கம்பளி                 
போர்த்திய                                 
மனிதர் மத்தியில்                   
இலையுதிர்ந்த                         
ஆற்றோர
"ஓக்" மரங்கள் !      
                 
ஓயாத                                           
அலைகள் கூட                            
சிலகாலம்                                   
ஓய்வெடுக்கும் !                     
   
பருந்துக்கு                                  
விருந்தான                                  
ஆண்  தோழன் !                    
முட்டையில்                                
இறந்து போன 
என் குஞ்சுகள் !                       
கரையான் தின்ற                   
புத்தகத்தில்                              
எஞ்சிய                                      
பக்கங்கள்                                  
என் வாழ்க்கை !

வசந்த காலத்துக்கு                            
நான்                                                              
வான் நோக்கி 
பறந்த போது
ஓய்வில்லாமல் 
ஓய்வெடுக்கும்
கடல் மீன்கள் !
என் 
கடைசி பதிவுகள் ! 

ஆழ்கடல்
உயரத்தில் 
முகிலுரசி
பறக்கும் போது
சோர்ந்துபோன
என் இறகுகள்
சொல்லிக்கொண்ட
வார்த்தை
" முயற்சி செய் " !

தூரத்தில் வரும்போது
தொட்டு முத்தமிட
நினைத்தேன் !
நெருங்கி வந்தபோது
பயந்து விலகினேன் !
அலுமினிய பறவை !

கடவுசிட்டு
குடியுரிமை அட்டை
எல்லை கோடு
கட்டுப்பாடு
அரைகுறை வாழ்க்கை
வசதி பொருக்க
வேலை
இதற்காக அல்ல !
எலும்புக்குருத்தை
ஊடறுத்துதாக்கும்
பனிப்புயல் !

புதுமண் தொட்டதும்
விசாரணை நடத்தி
முகாமில் அடைக்க  
நான் அகதியல்ல !
எனக்கு
வானமே எல்லை !

                                                 இப்படிக்கு
                                                  கனகராஜ் 

Tuesday, March 16, 2010

கல்கி பகவான், அம்மா பகவான்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். ஒரு களத்தில் எல்ஐசி முகவராக இருந்து ஊர் ஊராக பாலிசி பிடித்துக்கொண்டு இருந்தவர் திடிர்ரென்று கடவுள் என்னோடு பேசியதாகவும் நான் தான் பெருமாளின் கடைசி அவதாரமான கல்கி என்றும் கூற ஆரம்பித்துவிட்டார் ஆங்கிலமும் சரளமாக பேச தெரிந்தால் வசதியாக போய்விட்டது.



இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.


இந்நிலையில் ஆசிரமத்தை சுற்றி உள்ள தொண்டூர், உப்பள மடுகு, நிலவாய், காம்பாக்கம் போன்ற கிராம மக்களிடம் இருந்து 500 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக கல்கி பகவான் மீது புகார் எழுந்துள்ளன.


இது பற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்திலும் கிராம மக்கள் புகார் செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடையில் இவரது மகன் பெயரில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.


இந்நிலையில் ஹைதராபாத்தில் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ராகவலு  கூறுகையில்,


எல்ஐசி ஏஜெண்டாக இருந்த விஜயகுமார் தன்னை கல்கி பகவான் என்று கூறி பல்வேறு மோசடி செய்து வருகிறார்.


அவரது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதை கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார் அப்போது அவரது ஆசிரம ஊழியர்கள் பக்தர்கள் அருள் வந்து ஆடுவதாக கூறி புதிதாக வரும் பக்தர்களை ஏமாற்றி பணம் கறக்கிறார்கள்.


கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் அங்குள்ள கிராம மக்கள் என்னிடம் புகார் கூறினார்கள். இது பற்றியும் ஆந்திர அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இவரை பற்றி "இண்டியா டுடேயில்"  பக்கம் பக்கமாக எழுதி தள்ளி விட்டார்கள் ஆனால் மக்கள் இன்னும் திருந்திய பாடில்லை .

கொடுமுடிக்கு திர்த்தகாவடி எடுப்பதுபோல் இவரை பார்க்க படைஎடுதுக்கொண்டே இருக்கிறார்கள்.

திருமணமான தம்பதிகள் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கச்சென்றல் 50000  கறந்துவிட்டு ஒருநிமிடம் மட்டும் ஆசி வழங்குகிறார் கேட்டால் அந்த ஒரு நிமிடத்தில் கடவுளோடு நேரடியாக பேசி ஆசி வழங்குவதாக கூறுகிறார். கடவுளோடு நேரடியாக தொடர்பு வைத்துள்ள ஒருவருக்கு எதற்க்காக பணம் தேவைப்படுகிறது. இந்த அடிப்படை அறிவு கூட நம் மக்களிடம் இல்லை.


மக்களிடம் ஏற்படும் மறுமலர்ச்சியே இப்படிப்பட்ட பக்தி பகல்வேடதரிகளை சிறையில் தள்ளும்

Sunday, March 14, 2010

கண்ணீரில் கரையும் கல்லறை தெய்வங்கள்
















இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததா? 
 இல்லை


எப்படி உங்களுக்குத் தெரியும்?


எனக்கு அது தெரியும்.

பொதுமக்கள் மீது ஷெல் மற்றும் குண்டு வீச்சுக்கள் நடாத்தப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுக்கள் பற்றி…?




அது வெறும் குற்றச்சாட்டுக்கள். இலக்கு வைக்கப்பட்ட இடங்கள் மீது தான் தாக்குதல் நடாத்தப்பட்டது. அவை உண்மையான இலக்குகள்.
 
அமெரிக்க சி.என்.என். தொலைக்காட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் தான் மேலுள்ளவை.



இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணைகள் அழுத்தம் பெற்று வரும் சூழ்நிலையில் சி.என்.என். தொலைக்காட்சி Witness to Survival எனும் நான்கு பாகங்கள் கொண்ட விவரணத் தொடர் ஒன்றைத் தயாரித்துள்ளது.


போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கண்ட கேள்வியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் எழுப்பிய சி.என்.என். தொலைக்காட்சி வாழும் சாட்சியங்களூடாக அவரது பதிலை கேள்விக்குள்ளாக்குகிறது.




இரண்டு கால்களையும் மட்டுமல்ல ஒரு கண்ணையும் கூட போரில் பறிகொடுத்திருந்த ரவீந்திரன் ஜெனதாவின் சாட்சியத்தை அது பதிவு செய்திருக்கிறது.


அவர் பதுங்கியிருந்த பதுங்குகுழிக்கருகில் கூட குண்டுகள் விழுந்து வெடிக்கின்றன. அவருடைய உறவினருடைய குழந்தை அதிலேயே இநற்து விடுகிறது. தனது உயிரைப் பாதுகாக்க அவர் பதுங்குகுழியிலிருந்தும் ஓடியாக வேண்டியிருக்கிறது. அதன் போது வந்து விழுந்த ஒரு ஷெல்லில் அவர் தனது இரண்டு கால்களையும் இழக்க வேண்டியதாயிற்று.




இப்போது அவர் சுயமாக எதனையும் செய்ய முடியாதவராக எல்லா விடயங்களுக்குமே இன்னொருவரில் தங்கியிருப்பவராக ஆகியுள்ளார்.




என்னால் தனித்து எதுவும் செய்ய முடியாமலிருப்பது தான் எனது பெரிய பிரச்சினை என்று சொல்லும் போது அவருடைய வார்த்தைகள் உடைந்து விழுகின்றன. கண்களிலிருந்து நீர் பொலுபொலுவென உதிர்கிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை எதுவும் தனக்கில்லை என்கிறார் அவர்.




நான் மட்டும் தான் இந்த நிலைமைக்கு ஆளானேன் என்றில்லை. என்னைப் போல் ஏராளமானவர்கள் இந்தப் போரில் இவ்வாறு ஆகியுள்ளார்கள். அவர்களும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தான் நம்பிக்கை தருகின்றது என்கிறார் அவர்.




இதேபோல் இரண்டு கால்களையும் போரில் இழந்து சக்கர நாற்காலியுடனேயே வாழ்க்கையை கழிக்கும் சுப்ரமணியம் மகேஸ்வரனுடைய வாழ்வையும் பதிவு செய்திருக்கிறது. ஷெல் தாக்குதலின் காரணமாக அவருடைய இரண்டு கால்களும் அகற்றப்பட வேண்டியதாகி விட்டது. இது தவிர போரில் தமது உறவுகளை இழந்த சிலருடைய வாழ்வையும் அது பதிவு செய்திருக்கிறது.






போரில் அகப்பட்டு இடம் பெயர்ந்து வந்த மக்கள் வவுனியாவில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அம்முகாம்களுக்கு சர்வதேச ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பாக சிஎன்.என் கேட்டதற்கு போர் நடைபெற்ற போது சர்வதேச ஊடகங்கள் மேற்கொண்ட அணுகுமுறை அவர்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தார்கள். குறிப்பாக இடம் பெயர்ந்த மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவை தெரிவித்தன. அதனால் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று ராஜபக்ஷே தெரிவித்திருந்தார்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

  


தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில்  தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.



அருண் மொழித்தேவன் என்ற தனது பெயரை பார்பனர்களின் யோசனையால் ராஜராஜன் என மாற்றிக்கொண்டான்.


இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இவன் பிறக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் மக்கள் செழிப்புடன் வாழ கல்லணையை கட்டி பெருமை சேர்த்தான். ஆனால் இராஜராஜன் பார்பனர்கள் செழிப்புடன் வாழ இப்படி பல கோவில்களை கட்டினான்.

இருப்பினும் இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கோயில் அமைப்பு

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும், கோவிலின் நிழல் தரையில் படாத தொழில் நுட்பத்தையும்  பாராட்டாமல் இருக்கமுடியாது.


வெளி நாட்டினர் வியந்து பார்க்கும் இந்த கோவில் 1004ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது.

Friday, March 12, 2010

நித்யானந்தரின் பக்தர்

கதவை திறங்கள்
காற்று வரட்டும் !
என்றார் குமுதத்தில் !
கதவை திறந்தாள்
ஏதேதோ வருகிறது !
அவரின் அறையில் !!!!....


அவரை நினைத்தாள் எனக்கு எம். ஜி . ஆர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது ...



எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் !
சமயம் பார்த்து பல வழியிலும் கொள்ளை அடிக்கிறார் !
பக்தனை போலவே பகல் வேஷம் கட்டி ,
பாமர மக்களை வலையினில் மாட்டி ,
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !

Thursday, March 11, 2010

திராவிடர்


திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.

திராவிட மொழிகள்


திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 73 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு.

சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்திவடிவே லெறிந்த வான்பகை பொறாதுபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ளவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டுதென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

பாண்டியனை வாழ்த்தும் பொழுது"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்தமுந்நீர் விழவின் நெடியோன்நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)

"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.

இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும்.

அறிவியல் கூற்றுகள்


இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.பிலிப் ஸ்க்லேடெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.


ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர்.இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கல்லணை

இந்த அணை சோழ மன்னன் திருமாவளவன் எனும் கரிகாலனால்  கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.தற்போது உலகில் புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.


சர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை "மகத்தான அணை" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.