Saturday, December 25, 2010

கல்லறை தெய்வங்கள்



இலையுதிர்ந்த கிளைகள்
பச்சையம் வாடிய
கிளைகளின் முலைகள்
எலும்புக் கூடுகளாக
மரங்கள் !


முட்கள் புடைசூழ
வரவேற்கும்
நெருஞ்சி மலர்கள் !


புல் நுனியை
வளைத்து மின்னும்
கடைசி பனித்துளியில்
சூரியனின்
ஒளிச் சிதறல்கள் !


இங்கே
தென்றல் கூட
கசப்பு வாடை
வீசுகிறது !


கடைசிவரை
முகம்பார்க்க வராதவன்
காலடியில் விட்டுச்சென்ற
கண்ணீர் துளிகள்
தாயின் கல்லறையில் !


சு.கனகராஜ்

No comments: