Monday, January 3, 2011

என் மதி















கருப்பு நிலவை
மூடும்
இமை முகில் !

வியர்வை
கொட்டும்
புருவ அருவி !


தென்னம் ஓலையில்
தலைவாறிகொள்ளும்
தென்றல் ! - அவள்
சுவாசக் காற்றாக !


கூந்தல்
பகலில் எரியும்
இருள் விளக்கு !


வார்த்தையில்லாத 
கவிதை 
காது மடல் !

கிளிகள் 
கொத்த மறந்த  
கன்னம் !

புன்னகை 
மொழிபேசும் 
இதழ்கள் !

பூக்கள் 
களவாடும் 
பற்கள் !

"ம்" என்ற
 வார்த்தையில்
ஒளிந்துகொள்ளும்
அவள்  கேள்விகள் !


அவள் 
வாடிய  முகத்தை  
இளஞ்சிவப்பாக்கும்
கதிரொளி !

விரசம் 
தொடாத 
என் கவிதை 
நம் காதல் !  

             சு.கனகராஜ்



No comments: