Friday, April 1, 2011

Thomas Alva Edison




















 பிறப்பு  = பெப்ரவரி 11, 1847
 இறப்பு = அக்டோபர் 18, 1931

I cannot believe in the immortality of the soul. . . . I am an aggregate of cells, as, for instance, New York City is an aggregate of individuals. Will New York City go to heaven? . . . . No; nature made us--nature did it all--not the gods of the religions.



"மென்லோ பூங்காவின் மேதை" என்றழைக்கப்பட்ட எடிசன், திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். இவர் சாமுவேல் எடிசனுக்கும் நான்சி மாத்தியூஸ் எலியட் என்பாருக்கும் கடைக்குட்டியாக பிறந்தார்.


தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார்.


1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பரிபோனது!  
 
இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார் சில காலம்; பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். 1862 சமயம், ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், ஓடும் இரயில் வண்டியிலிருந்த படியே!  
 
முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு


புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன்.


மின்குமிழி [Electric Bulb]

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது!

எடிசன் , பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்.

எடிசன் பொன்மொழிகள்


"I have never seen the slightest scientific proof of the religious ideas of heaven and hell, of future life for individuals, or of a personal God."


"I do not believe that any type of religion should ever be introduced into the public schools of the United States."



"So far as religion of the day is concerned, it is a damned fake... Religion is all bunk."

மேதை எனப்படுபவன் 1 சதவீதம் ஊக்கமும் 99 சதவீதம் விடாமுயற்சியும் உடையவனே”.


                                                                    - எடிசன்




No comments: