Sunday, January 9, 2011

சமூக நீதிக்கான உயர்ந்த தீப்பந்தம்















பெயர்               =  பாபாசாஹிப் அம்பேத்கர்
கதாநாயகன்   =  அம்பேத்கர்
வில்லன்          =  காந்தி
நடிப்பு                =  மம்முட்டி

படத்தின் கதையாக்கம் , ஒளிப்பதிவு மற்றும் மம்முட்டியின் நடிப்பு மிகவும் அருமையாக  உள்ளது . பெரியார் படத்தை விட ஆயியம் மடங்கு உயர்ந்து நிற்கிறது இந்த படம் . பெரியார் படத்தில் இடைவேளைக்குப்பிறகு அவரின் வாழ்க்கை நகர்வுகளை மட்டும் மையப்படுத்தி நகரும் ஆனால் இந்தப்படத்தில் அவரின் போராட்டங்களை மிகவும் வீரியத்தோடு  சொல்கிறது.


பெரியாரின் இந்தியாவின் அரசியல் சட்ட எரிப்புப்போரட்டம் , இந்தியா சீனா போரின்போது அவரின் ஆலய நுழைவுப்போராட்டம் , ராமர் பட எரிப்புப்போரட்டம் , பிள்ளையார் சிலை உடைப்புபோரட்டம் , இராமாயண எரிப்புப்போரட்டம் , குலக்கல்வித்திட்ட எதிப்புப்போரட்டம் , போன்ற எத்தனையோ போராட்டங்களை மறைத்து அவரை காங்கிரஸ் பெரியாராகவே காட்டினார்கள் . ஆனால் அம்பேத்கர் படத்தில் மனுதர்ம எரிப்புப்போரட்டம் , பிரமணர்களுக்கு எதிராக அவர் பேசும் சாட்டையடி வசனங்கள் , காந்தியையும் அவர் கொள்கைகளையும் சாடும் கனல் கக்கும் வசனங்கள் , இந்தியா சுதந்திர போராட்டத்தைவிட  சாமூக விடுதலை தான் முக்கியம் என பேசும் வசனங்கள் இன்றைய இளைய தலைமுறையை    சிந்திக்க வைக்கிறது. 



அன்றைய சாதிக்கொடுமைகளை தோலுரித்துக்காட்டுகிறது. கேடுகெட்ட  இந்துமதத்தை துக்கி எறிந்துவிட்டு புத்த மதத்தை தழுவும் போது பேசும் வசனங்கள் மற்றும் நாசிக் கோவிலை பற்றி அவர் மனைவிக்கு  கூறும் கருத்துக்கள் இந்து மதத்திற்கு அவர் போடும் சம்மட்டி அடி . 


அவர் குறிப்பிட்ட சமுதாயதிற்கு மட்டும் சொந்தமல்ல ஒட்டுமொத்த பார்பனர் அல்லாதார்க்கும் சொந்தம் .


காந்தியை மகாத்மா என்று சொல்பவர்களும் அதை  நம்பி ஏற்றுக்கொள்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .

அம்பேத்கர் படத்தை வசதியாக தங்கள் இலச்சினையில் போட்டுக்கொள்ளும் மதவாத சக்திகள் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

No comments: