Monday, March 22, 2010

சாதியும் சாமியும்



சிதறிக்கிடந்த கண்ணாடி 
வளையல்களில் 
கண்ணிர் துளிகள் 
தாயின் கண்களில் !

காப்பாற்றபட்ட  சாதி
குருதி வாசம்
அரிவாள் நுனியில் 
தந்தையின் கைகளில் !

காயாத காதலன் முத்தம் 
கழுத்தோடு உறைந்த 
இரத்தம் 
கடைசி சுவாசம் 
தாயின் மடியில் !

சுவரில் சாய்ந்த
முருகன் படம்
கையில் வேலோடு
அருகில்
குறப்பெண் வள்ளி ! 

இப்படிக்கு
கனகராஜ்
(கருமூலம் பெ. தி .க  மேடைபேச்சு )

No comments: