Sunday, March 14, 2010

கண்ணீரில் கரையும் கல்லறை தெய்வங்கள்
















இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததா? 
 இல்லை


எப்படி உங்களுக்குத் தெரியும்?


எனக்கு அது தெரியும்.

பொதுமக்கள் மீது ஷெல் மற்றும் குண்டு வீச்சுக்கள் நடாத்தப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுக்கள் பற்றி…?




அது வெறும் குற்றச்சாட்டுக்கள். இலக்கு வைக்கப்பட்ட இடங்கள் மீது தான் தாக்குதல் நடாத்தப்பட்டது. அவை உண்மையான இலக்குகள்.
 
அமெரிக்க சி.என்.என். தொலைக்காட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் தான் மேலுள்ளவை.



இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணைகள் அழுத்தம் பெற்று வரும் சூழ்நிலையில் சி.என்.என். தொலைக்காட்சி Witness to Survival எனும் நான்கு பாகங்கள் கொண்ட விவரணத் தொடர் ஒன்றைத் தயாரித்துள்ளது.


போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கண்ட கேள்வியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் எழுப்பிய சி.என்.என். தொலைக்காட்சி வாழும் சாட்சியங்களூடாக அவரது பதிலை கேள்விக்குள்ளாக்குகிறது.




இரண்டு கால்களையும் மட்டுமல்ல ஒரு கண்ணையும் கூட போரில் பறிகொடுத்திருந்த ரவீந்திரன் ஜெனதாவின் சாட்சியத்தை அது பதிவு செய்திருக்கிறது.


அவர் பதுங்கியிருந்த பதுங்குகுழிக்கருகில் கூட குண்டுகள் விழுந்து வெடிக்கின்றன. அவருடைய உறவினருடைய குழந்தை அதிலேயே இநற்து விடுகிறது. தனது உயிரைப் பாதுகாக்க அவர் பதுங்குகுழியிலிருந்தும் ஓடியாக வேண்டியிருக்கிறது. அதன் போது வந்து விழுந்த ஒரு ஷெல்லில் அவர் தனது இரண்டு கால்களையும் இழக்க வேண்டியதாயிற்று.




இப்போது அவர் சுயமாக எதனையும் செய்ய முடியாதவராக எல்லா விடயங்களுக்குமே இன்னொருவரில் தங்கியிருப்பவராக ஆகியுள்ளார்.




என்னால் தனித்து எதுவும் செய்ய முடியாமலிருப்பது தான் எனது பெரிய பிரச்சினை என்று சொல்லும் போது அவருடைய வார்த்தைகள் உடைந்து விழுகின்றன. கண்களிலிருந்து நீர் பொலுபொலுவென உதிர்கிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை எதுவும் தனக்கில்லை என்கிறார் அவர்.




நான் மட்டும் தான் இந்த நிலைமைக்கு ஆளானேன் என்றில்லை. என்னைப் போல் ஏராளமானவர்கள் இந்தப் போரில் இவ்வாறு ஆகியுள்ளார்கள். அவர்களும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தான் நம்பிக்கை தருகின்றது என்கிறார் அவர்.




இதேபோல் இரண்டு கால்களையும் போரில் இழந்து சக்கர நாற்காலியுடனேயே வாழ்க்கையை கழிக்கும் சுப்ரமணியம் மகேஸ்வரனுடைய வாழ்வையும் பதிவு செய்திருக்கிறது. ஷெல் தாக்குதலின் காரணமாக அவருடைய இரண்டு கால்களும் அகற்றப்பட வேண்டியதாகி விட்டது. இது தவிர போரில் தமது உறவுகளை இழந்த சிலருடைய வாழ்வையும் அது பதிவு செய்திருக்கிறது.






போரில் அகப்பட்டு இடம் பெயர்ந்து வந்த மக்கள் வவுனியாவில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அம்முகாம்களுக்கு சர்வதேச ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பாக சிஎன்.என் கேட்டதற்கு போர் நடைபெற்ற போது சர்வதேச ஊடகங்கள் மேற்கொண்ட அணுகுமுறை அவர்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தார்கள். குறிப்பாக இடம் பெயர்ந்த மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவை தெரிவித்தன. அதனால் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று ராஜபக்ஷே தெரிவித்திருந்தார்.

No comments: